இன்னொரு இன்றில்
இறுகப் பிணைந்திருந்த
இரண்டு பேர்
இன்னமும் முடித்தபாடில்லை தம் கூடலை
தராத முத்தங்கள் தரப்பட்டு
அணுக நேரமற்ற அங்கலாவண்யங்கள்
ஆசை பொங்க ஆரத் தழுவி
வருடப்பட்டுக்கொண்டிருக்கின்றன
முன் ஜென்ம தேகங்களும் முயங்கலாகும்
அன்பின் மிகுதியில்
இருப்பின் அவசங்களும் அவசரங்களும்
இல்லாது போக
விருப்பின் உக்கிரம் வளர்பிறையாக
செல்ல விளிகள் மெல்ல மெல்ல வெளிக்கிளம்பி
நல்கிய வலி நிவாரணத்தில் கலிதீர நலம் பெறும் மனதின்
ஒறைப் பிரார்த்தனையாய் நீளும்
முற்றுப்பெறாது
காரிருளும் கலந்துறவாடலும்
Saturday, September 6, 2008
பேரரசன்
கடவுளே சின்னஞ்சிறு சிமிழுக்குள்
கட்டுண்டு கிடந்தாலும்
எல்லையற்ற பெருவெளியின்
அரசனாக எண்ணுவேன் நான்...
கட்டுண்டு கிடந்தாலும்
எல்லையற்ற பெருவெளியின்
அரசனாக எண்ணுவேன் நான்...
Monday, August 25, 2008
பரந்து கிடக்கிறது நீர் வெளி
தொலைவில் கேட்கிறது
தனித்தலைபவனின் தாபக்குரல்
எப்போதேனும் என்னை உங்களுக்கு நினைவு வரலாம்
அப்போது நான் இல்லாமல் போகக் குஉடும்
தொலைவில் கேட்கிறது
தனித்தலைபவனின் தாபக்குரல்
எப்போதேனும் என்னை உங்களுக்கு நினைவு வரலாம்
அப்போது நான் இல்லாமல் போகக் குஉடும்
Subscribe to:
Posts (Atom)
