Saturday, September 6, 2008

பற்றாக்குறை

இன்னொரு இன்றில்
இறுகப் பிணைந்திருந்த‌
இரண்டு பேர்
இன்னமும் முடித்தபாடில்லை தம் கூடலை

தராத முத்தங்கள் தரப்பட்டு
அணுக நேரமற்ற அங்கலாவண்யங்கள்
ஆசை பொங்க ஆரத் தழுவி
வருடப்பட்டுக்கொண்டிருக்கின்றன‌
முன் ஜென்ம தேகங்களும் முயங்கலாகும்

அன்பின் மிகுதியில்
இருப்பின் அவசங்களும் அவசரங்களும்
இல்லாது போக
விருப்பின் உக்கிரம் வளர்பிறையாக
செல்ல விளிகள் மெல்ல மெல்ல வெளிக்கிளம்பி
நல்கிய வலி நிவாரணத்தில் கலிதீர நலம் பெறும் மனதின்
ஒறைப் பிரார்த்தனையாய் நீளும்
முற்றுப்பெறாது
காரிருளும் கலந்துறவாடலும்

2 comments:

Thamiz Priyan said...

பற்றாக்குறையா? அதெல்லாம் இருப்பது போல தெரியலையே?... பின் நவீனத்துவ கவிஞர்கள் போல இருக்கு.... வாழ்த்துக்கள்!

ரமேஷ் வைத்யா said...

நன்றி தமிழ்ப்பிரியன். உங்களுக்குத் தனிமடலாக (நீளமா) எழுதுகிறேன்.